நடிகை ஜியா கான் தூக்கு போட்டதால் தான் இறந்தார்: பிரேத பரிசோதனை அறிக்கை
Subscribe to Oneindia Tamil

கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான்(25) கடந்த 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட அவர் சாகும் முன்பு 6 பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரது காதல் சூரஜ் பஞ்சோலியை(21) போலீசார் கைது செய்தனர்.
அந்த கடித்ததில் சூரஜ் தன்னை கற்பழித்ததாக ஜியா எழுதியிருந்தார். இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் ஜியா தூக்கு போட்டதால் தான் இறந்தார் என்றும், அவரது உடலில் காயம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications