வெள்ளத்தில் சிக்கியோரை விரைந்து மீட்க மத்திய அரசு, உத்தரகண்ட் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கியிருப்போரை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

உத்தர்காண்ட் வெள்ளம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். அவர்களை மீட்க போதுமான ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 25-ந் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தாமாகவே பொதுநலன் மனுவாக எடுத்து இந்த உத்தரவை பிறப்பித்ததா என்பது பற்றிய செய்திகள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications