காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் 17,500 என்எல்சி ஊழியர்கள்
வடலூர்: என்எல்சி பங்குகளை விற்க முடிவு செய்த மத்திய அரசை எதிர்த்து, காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது தொழிற்சங்க கூட்டமைப்பு.
நேற்று, நெய்வேலியில் உள்ள அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து அண்ணா தொழிலா ளர் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமையில், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், தொமுச தலைவர் திருமாவளவன், பொருளாளர் அண்ணாத்துரை, அலுவலக செயலாளர் ஸ்ரீதரன், ஆகியோர் முன்னிலை வகிக்க, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க தலைவர் அபு, சிஐடியு குப்புசாமி, வேல்முருகன், ஐஎன்டியுசி ரவிக்குமார், பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் திலகர், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 12 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
என்எல்சியின் பங்கு விற்கும் முடிவை எடுத்த மத்திய அரசை, கண்டிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அதிகாரப்பூர்வமாக, வேலை நிறுத்த நோட்டீஸ்ஸை வழங்கப்போவதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications