இங்கு எல்லாப் பெண்களும் கற்பழிக்கப் படுகிறார்களா?: மம்தா ஆவேசம்

சமீப காலமாக மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகமாகி இருப்பதாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கற்பழித்துக் கொல்லப் பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காக சைக்கிளில் மம்தா சென்றார்.
ஆனாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மம்தாவிற்கு எதிராக மீடியாக்களில் சிலர் ஆவேசமாக பேசி வருகின்றனர். மம்தாவும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 30942 நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பர்க்கானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடுமையாக ஊடகங்களை கண்டித்துள்ளார்.
மேலும், அக்கூட்டத்தில் மம்தா கூறியதாவது, ' சில ஊடகங்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு எங்கள் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுக்கின்றன. மேலும் அரசுக்கு எதிராக அவர்கள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வதால் மேற்கு வங்கத்திற்கு அவர்கள் அவமானத்தை கொண்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு பிரச்சினைகாகவும் என்னை குறைகூறினார்கள். இப்பொழுது அவர்கள் கற்பழிப்பிற்காக என்னை கூட வசை பாடுகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா?' என காரசாரமாக கேள்வி கேட்டுள்ளார் மம்தா.












Click it and Unblock the Notifications