உத்தரகண்டில் மேலும் 15 நாட்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணி: ஷிண்டே
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான 20 பேருக்கு இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். இதில் மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீனும்(27) அடக்கம். உயிர் இழந்தவர்களில் 5 பேர் விமானப் படை வீரர்கள், 9 பேர் தேசிய பேரழிவு மீட்பு படையினர், 6 பேர் இந்திய-திபெத் எல்லை போலீசார் ஆவர்.
அவர்கள் அனைவரின் உடல்களுக்கும் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுனா, ராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களில் வயாதனவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் முதலில் மீட்கப்படுவார்கள். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் இன்னும் 15 நாட்களுக்கு மீட்பு பணியில் ஈடுபடும். மீட்பு பணியை துரிதப்படுத்த கூடுதல் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சார் தாம் புனிதயாத்திரை சர்க்யூட்டை சீரமைக்க ரூ.195 கோடி நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரகண்டில் 3,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை மாநில அரசின் இணையதளத்தில் அப்லோட் செய்தால் அது அவர்களை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications