சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு.. பி.ஜே. குரியன் விடுவிப்பு!
இடுக்கி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரியநெல்லி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தில் 16 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று \பலாத்காரம் செய்ததாக 40 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆனால் கேரள அரசு செய்த மேல்முறையீட்டால் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டது.
கேரள மாநிலம் தொடுபுழா செசன்ஸ் நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்ற போது ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் தம்மை பலாத்காரம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூற பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் குரியன் இதை நிராகரித்திருந்தார். ஆனால் வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்மராஜன் என்பவரும் கூட குரியனிடம் அப்பெண்ணை தான் அழைத்துச் சென்றதாக கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. பி.ஜே.குரியன் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த வழக்கில் புதிதாக எந்த உண்மைகளும் இல்லை என்று கூறியது தொடுபுழா செசன்ஸ் நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications