நியூசிலாந்தில் மாயமான இந்திய மாணவர்! போலீஸ் தீவிர தேடுதல்!
வெலிங்டன்: நியூசிலாந்தில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல்போய்விட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அன்குர் சர்மா கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மாணவர் விசாவில் நியூசிலாந்து வந்துள்ளார். நியூசிலாந்தின் வடக்கு தீவுப் பகுதியான ஆக்லாந்தின் புறநகரான மனுரெவவில் தங்கியிருந்துள்ளார். அண்மையில் பணி விசா ஒன்றையும் எடுத்திருக்கிறார். அது மார்ச் 2014வரை பயன்பாட்டுக்குரியது.
இந்நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள பெற்றோருடன் அன்குர் சர்மா தொடர்பு கொள்ளவில்லை. அவரது பெற்றோரும் பலமுறை முயற்சித்துன் அன்குமார் சர்மா பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல் போன மாணவர் பற்றிய விவரங்களை வெளியிட்டு அவரைப் பற்றிய தகவல் அறிந்தோர் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆக்லாந்து நகரத்தில்தான் அன்குர் சர்மா இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications