சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாகிறது…!
டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்த சான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளது.

மும்பை தாக்குதல்
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சிம் கார்டு விற்பனையில் அதிக கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளூர் ஆட்களை தொடர்பு கொள்ள இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் இந்த சிம் கார்டுகளை பெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மொபைல் வாடிக்கையாளர்களிடம் சிம் கார்டு விற்பனைக்கு முன் உடல்சார்ந்த சான்றுகளை பெற தொலைத்தொடர்பு துறை முடிவு செய்திருந்தது. ஆனால் சிம் கார்டு தொடர்பாக விற்பனையாளர்களிடம் இருந்து நாடு முழுவதும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த உத்தரவு முறையாகவும் கடுமையாகவும் பின்பற்றாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்கார்டு விற்பனை
இந்த புதிய திட்டம் குறித்து தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிக சிம் கார்டுகளை விற்க வேண்டும் என விற்பனையாளர்களிடம் நிலவும் கடும் போட்டியில் உடல்சார்ந்த சான்று சரிபார்ப்பது எளிதான காரியம் அல்ல என தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

முதல்வர்கள் மாநாடு
இந்த திட்டம் குறித்து கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியம் காரணமாகவே சிம் கார்டுகள் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாது அல்லது போலி ஆவணங்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநாட்டில் கூறப்பட்டது.

குற்றவாளிகள் கையில் சிம்
அதை தொடர்ந்து கை விடப்பட்ட இந்த திட்டம், மே 15ம் தேதி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்த திட்டத்தை மீண்டும் கொண்ட வர வலியுறுத்தினார். விற்பனையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவிலான சிம் கார்டுகளை ஒரே நபரிடம் விற்பனை செய்வதே அந்த சிம் கார்டுகள் குற்றவாளிகளின் கையில் சென்று நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
-
விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு மெகா முடிவு? சென்னை டூ அமெரிக்கா டிக்கெட் விலை குறையுமா -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications