சிம் கார்டு வாங்க கைரேகை கட்டாயமாகிறது…!
டெல்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய சிம் கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லது உடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்த சான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும் உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளது.

மும்பை தாக்குதல்
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சிம் கார்டு விற்பனையில் அதிக கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளூர் ஆட்களை தொடர்பு கொள்ள இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலம் இவர்கள் இந்த சிம் கார்டுகளை பெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மொபைல் வாடிக்கையாளர்களிடம் சிம் கார்டு விற்பனைக்கு முன் உடல்சார்ந்த சான்றுகளை பெற தொலைத்தொடர்பு துறை முடிவு செய்திருந்தது. ஆனால் சிம் கார்டு தொடர்பாக விற்பனையாளர்களிடம் இருந்து நாடு முழுவதும் ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருந்தன. இந்த உத்தரவு முறையாகவும் கடுமையாகவும் பின்பற்றாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்கார்டு விற்பனை
இந்த புதிய திட்டம் குறித்து தொலைத் தொடர்புத்துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிக சிம் கார்டுகளை விற்க வேண்டும் என விற்பனையாளர்களிடம் நிலவும் கடும் போட்டியில் உடல்சார்ந்த சான்று சரிபார்ப்பது எளிதான காரியம் அல்ல என தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

முதல்வர்கள் மாநாடு
இந்த திட்டம் குறித்து கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அலட்சியம் காரணமாகவே சிம் கார்டுகள் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாது அல்லது போலி ஆவணங்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநாட்டில் கூறப்பட்டது.

குற்றவாளிகள் கையில் சிம்
அதை தொடர்ந்து கை விடப்பட்ட இந்த திட்டம், மே 15ம் தேதி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் இந்த திட்டத்தை மீண்டும் கொண்ட வர வலியுறுத்தினார். விற்பனையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவிலான சிம் கார்டுகளை ஒரே நபரிடம் விற்பனை செய்வதே அந்த சிம் கார்டுகள் குற்றவாளிகளின் கையில் சென்று நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications