சென்னையில் 3 மாத சிசுவை கடத்தி விற்க முயன்ற பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பிறந்து மூன்றே மாதம் ஆன ஆண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த மரகதம் என்பவர் பிறந்து மூன்றே மாதமான ஆண் குழந்தை ஒன்றை சென்னை கிண்டி பாரதிநகரில் இன்று காலை 7 ஆயிரத்திற்கு விற்க முயன்றுள்ளனர்.
அப்போது, இது குறித்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இது தொடர்பாக மரகதத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தையை கடத்தி விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவர் வைத்திருந்த குழந்தையை மீட்டனர்.
7 ஆயிரத்திற்கு விற்க முயன்ற குழந்தை யாருடையது? எப்படி கடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications