விழுப்புரத்திலும் பாய்ந்தது 144 தடை.... இளவரசன் மரணத்தால் கலவரம் ஏற்படாமல் தடுக்க!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தர்மபுரியைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மரக்காணத்தில் பாமகவினர் நிகழ்த்திய மிகப் பெரிய வன்முறை மற்றும் படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஜூன் 30ம் தேதி நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரி இளவரசன் மரணத்தையொட்டி கலவரம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக என்றுகூறி மீண்டும் அங்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
நேற்று 5.7.2013 நள்ளிரவு முதல் மீண்டும் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications