செகந்திராபாத்தில் ஹோட்டல் இடிந்து விபத்து: 12 பேர் பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் சிட்டி லைட் என்ற ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகினர். 16 பேர் காயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ராஷ்ட்ரபதி ரோட்டில் உள்ளது சிட்டி லைட் என்னும் 2 அடுக்கு மாடி ஹோட்டல். இந்த ஹோட்டல் இன்று காலை 6.30 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் நடந்தபோது ஹோட்டலுக்குள் 20 முதல் 25 பேர் இருந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர், 16 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குகள் 40 பேர் வரை சிக்கியிருக்கக்கூடும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications