உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் ஏற்போம்.. இளவரசன் தந்தை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: எனது மகனின் மறு பிரேதப் பரிசோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் அதை ஏற்போம். அப்பீல் செய்யும் எண்ணம் இல்லை என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் கூறியுள்ளார்.

இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இளங்கோவன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மேலும் இன்று இளவரசன் உடலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த வீடியோவை நீதிபதிகள் குழு பார்வையிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இளவரசனின் தந்தை இளங்கோவன் கூறுகையில், எனது மகனின் பிணத்தை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அதன்படி நடந்து கொள்வோம்.

மறு பரிசோதனை தேவையில்லை. தர்மபுரியில் நடந்த பிரேத பரிசோதனை போதும், அதில் சந்தேகம் இல்லை என்று கூறி பிணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து பிணத்தை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்வோம்.

எனது மகனின் இறுதிச் சடங்கு நல்லபடியாக நடந்தால் போதும். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்படுவோம். அந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய மாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+