அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் கைதானவர் நீதிபதி முன்பு தற்கொலை முயற்சி
திருமங்கலம்: அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் கைதான விசாரனைக் கைதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி முன்பு பிளேடால் கழுத்தில் அறுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அருகே திருநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பாஜக மூத்த தலைவர் அத்வானியை பைப் குண்டு மூலம் கொல்ல முயன்ற வழக்கில் கடந்த மார்ச் 26ம் தேதி திருநகரில் வைத்து இவரை போலீசார் கைதுசெய்தனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாகீர் உசேன் நேற்று திருமங்கலம் கோர்ட்டுக்கு ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்டார். மதியம் 1.15 மணிக்கு நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் எனக்கு பாளையங்கோட்டையில் மதரீதியாக சித்ரவதை நடக்கிறது. எனவே வேறு சிறைக்கு மாற்றுங்கள் என ஜாகீர் உசேன் கோரிக்கை வைத்தார். இதை மனுவாக எழுதி கொடுங்கள் என நீதிபதி தெரிவித்தார். எனவே அவரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மீண்டும்1.30 மணிக்கு உசேன் எழுதிய மனுவுடன் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் நீதிபதி முன்பு தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் உசேன் தனது கழுத்திலும், கை மணிக்கட்டுபகுதியிலும் வெட்டி கொண்டார். இதை பார்த்த அனைவரும் அதிர்ந்தனர். நீதிபதி அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 10ல் மதுரை மத்திய சிறையில் இருந்து திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கொண்டு வந்தனர். அப்போது ஜாமீன் வழங்க கோரி திடீரென நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு பிளேடால் தனது கைகளை அறுத்துக் கொண்டார். எனவே அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications