தெலுங்கானா குறித்து காங்கிரஸ் நாளை முடிவு- ஆந்திராவில் பதற்றம்!
ஹைதராபாத்: பல ஆண்டுகளாக நீடித்து வரும் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திராவில் 10 மாவட்டங்களைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டங்கள் மடிந்த உயிர்கள் பல..உச்சகட்டமாக 2009ஆம் ஆண்டு போராட்டம் நடந்த போது தனித் தெலுங்கானா மாநிலம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி மொழி அளித்தது.
ஆனாலும் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படவில்லை இதனால் போராட்டங்கள் தொடர் கதையாகின. ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாகும் வகையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினரும் கொடிபிடிக்கத் தொடங்கினர். விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா விவகாரத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நாளை காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, துணை முதல்வர் தாமோதர் ராஜநரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்ஸா சத்திய நாராயணனா ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் தெலுங்கானா தொடர்பான தங்களது நிலைபாட்டை தெரிவிக்க இருக்கின்றனர்.
இதனிடையே நாளை ஐக்கிய ஆந்திர மாணவர் கமிட்டி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் டெல்லிக்கும் ஒரு குழு சென்று காங்கிரஸ் பொதுச்செயல்ர் திக்விஜய்சிங்கை சந்திக்க இருக்கிறது. மேலும் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் வீட்டில் இன்று காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications