‘மம்மூத் நியூ செஞ்சுரி குளோபல் சென்டர்’: உலகின் மிகப் பிரமாண்ட கட்டிடம் சீனாவில் திறப்பு
பெய்ஜிங்: சீனாவில் மிக உயரமான, அதே சமயம் பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையை துபாயில் உள்ள அரை கி.மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும், 100 மீட்டர் உயரம் கொண்ட விமான நிலையம் தான் பெற்றிருந்தது. ஆனால், தற்போது அதை விட பெரிய கட்டிடம் ஒன்று சீனாவில் கட்டப் பட்டுள்ளது.
இது கிட்டத் தட்ட அமெரிக்காவில் உள்ள பெண்டகன் கட்டிடத்தை விட பலமடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட கட்டிஒடம்...
இந்தப் பிரமாண்ட கட்டிடம் செங்டு நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 1 கோடியே 90 லட்சம் சதுர அடி ஆகும். இது கிட்டத்தட்ட 329 கால்பந்து மைதானத்தின் பரப்பளவுக்குச் சமம் ஆகும்.

மம்மூத் செண்டர்...
இந்த பிரமாண்ட கட்டிடத்திற்கு ‘மம்மூத் நியூ செஞ்சுரி குளோபல் சென்டர்' என பெயரிடப்பட்டுள்ளது.

எல்லாமும் இருக்கு...
கண்ணாடி மற்றும் இரும்பினால் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம், வீடுகள், கடைகள், ஓட்டல்கள், அலுவலகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

கடற்கரை அழகு....
மேலும், கடற்கரையில் கடல் அழகையும், சூரிய உதயம் மற்றும் மறைவையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் கட்டிட வடிவமைப்பு அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பனி சறுக்கு நிலையம்...
இந்தக் கட்டிடத்தில் நாற்பதாயிரம் பேர் ஒரு சேர சன்பாத் எடுக்க இயலும். 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. 16 தியேட்டர்களும், செயற்கை பனிச் சறுக்கு நிலையமும் அமையப் பெற்றுள்ளது இக்கட்டிடத்தின் சிறப்பம்சம்.












Click it and Unblock the Notifications