ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம்- தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
விஷவாயு கசிவு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை உள்ள பகுதியில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடி சீல் வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு செய்தது. இந்த மனுவைப் பரிசீலித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து பரிசீலிக்க உத்தரவிட்டது.
இந்த குழு, ஆலை தொடர்ந்து இயங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது. இதைப் பரிசீலித்த தீர்ப்பாயம் தற்போது ஆலை தொடர்ந்து இயங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications