குஜராத்தில் 7 பேரை பலி கொண்டது காங்கோ காய்ச்சல்! ஆந்திராவில் சவூதி கரோனா பீதி!!
ஹைதராபாத்/அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் ‘காங்கோ காய்ச்சல்'என்ற வைரஸ் நோய்க்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர். இதேபோல் ஆந்திர மாநிலத்தில் சவூதி அரேபியாவை அலற வைத்திருக்கும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் பீதி ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் திடீரென மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்னிக்கை அதிகரித்து உயிரிழப்பும் தொடர் கதையானது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஒருவித ‘காங்கோ காய்ச்சல்' தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை அம்ரேலி மாவட்டத்தில் 7 பேர், காங்கோ காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர்.
இதேபோல் சவூதி அரேபியாவில் கரோனா என்ற வைரஸ் நோய் பரவி 50 பேர் வரை பலியாகி உள்ளனர். அண்மையில் சவூதியில் இருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வந்த சபீர் என்பவர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் உடல் பரிசோதிக்கப்பட்டதில் சவூதி கரோனா வைரஸ் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சவூதியில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். இன்று பன்றி காய்ச்சலை விட கொடூரமானது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications