கோவையில் பயங்கரம்: மும்பை நகை வியாபாரிகளிடம் ரூ.2 கோடி தங்க நகை கொள்ளை
கோவை: கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த மும்பை தங்க நகை வியாபாரிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 7.2 கிலோ தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பையை சேர்ந்த நகை வியாபாரிகள் நவீன்குமார் ஜெயின் மற்றும் ஜெயின்லால் ஆகிய இருவரும் வியாபாரம் தொடர்பாக பெங்களூர் வந்தனர். பெங்களூரில் கடை வியாபாரத்தை முடித்த பின்பு அங்கிருந்து நேற்று காலை கோவை வந்தனர். கோவையில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் பெற்று விட்டு நேற்று இரவு கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.
விற்பனைக்காக கொண்டு வந்த 7.2 கிலோ தங்க நகைகளை அறையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக இரவு 10 மணி அளவில் சென்றனர். பின்பு 11 மணி அளவில் அறைக்கு திரும்பிய வியாபாரிகள் அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 7.2 கிலோ தங்க நகைகள் கெள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து பெரிய கடைவீதி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூட்டப்பட்டு இருந்த அறைக்குள் நகைகள் கொளளையடிக்கப்பட்டு இருப்பதால், லாட்ஜ் ஊழியர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா அல்லது நகை வியாபாரிகள் நாடகமாடுகின்றனரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நகரில் தொடர்ச்சியாக நகை வியாபாரிகளை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நகை வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications