மகள்களை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த காமக்கொடூரன்: 3 வயது பேத்தியிடமும் தவறாக நடந்தான்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 20 ஆண்டுகளாக மகள்களை கற்பழித்து வந்த தந்தை மற்றும் இது குறித்து அறிந்தும் கண்டுகொள்ளாத தாய் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரைச் சேர்ந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது அவரது மகள்கள் 2 பேர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அவருக்கு 5 மகள்கள். அதில் 2 மகள்களை அவர் கடந்த 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த 2 பெண்களும் 7 மற்றும் 8 வகுப்பு படிக்கும் போதில் இருந்தே தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.
பலாத்காரம் செய்யும் முன்பு அவர் மகள்களுக்கு ஆபாச படங்களை போட்டுக் காட்டுவாராம் இதில் அந்த பெண்கள் பல முறை கர்ப்பம் அடைந்துள்ளனர். அந்த 2 பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. அதில் மூத்த மகள் திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்துள்ளார். தந்தையின் இந்த லீலை தெரிந்தும் அப்பெண்களின் தாய் அதை கண்டுகொள்ளவே இல்லை. தந்தையின் ஆசைக்கு இணங்க மறுத்தால் மீதமுள்ள 3 சகோதரிகளையும் சீரழிப்பேன் என்று அந்த நபர் மிரட்டி வந்துள்ளார்.
அந்த நபர் தனது மகள்கள் 2 பேரையும் ஜெய்பூர், ஆக்ரா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று ஹோட்டல்களில் ரூம் போட்டு பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் தாங்கள் இத்தனை ஆண்டு காலமாக பட்ட வேதனை குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். தங்களை சீரழித்த தந்தை மற்றும் அதை தட்டிக் கேட்காத தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த நபர் மீதமுள்ள 3 மகள்களையும் பலாத்காரம் செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த 2 சகோதரிகளில் ஒருவரின் 3 வயது மகளிடம் அந்த காமக்கொடூரன் தவறாக நடந்து கொண்டதை அடுத்து தான் அவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த காமக்கொடூரனை கைது செய்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications