அவதூறு வழக்கு: ஆக.21ல் ஆஜராக பிரேமலதாவுக்கு சம்மன்

Subscribe to Oneindia Tamil

Defamation case court issue summons to Premalatha
சென்னை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மைத்துனர் சுதீஷ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியுள்ளதாவது:

29.1.2013 அன்று கேப்டன் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவும், சசிகலாவும் மக்கள் பணத்தில் மிகப்பெரிய ஒட்டியாணம் வாங்கியுள்ளனர் என்பது உள்ளிட்ட அவதூறு தகவல்களை வெளியிட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.

எனவே கேப்டன் டி.வி.யில் செய்தி வாசித்த செம்மலர் ரமேஷ், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன், நாராயணன், கேப்டனர் டி.வி. சேர்மன் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கேப்டனர் டி.வி. சேர்மன் பிரேமலதா, நிர்வாக இயக்குனர் சுதீஷ் உள்பட 4 பேர் ஆகஸ்ட் 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+