தெலுங்கானா.. நாளை காங். காரிய கமிட்டி கூடுகிறது! இறுதி முடிவு அறிவிக்கப்படுகிறது!!
டெல்லி/ஹைதராபாத்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
ஆந்திராவை பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டகால கோராட்டம் இதற்காக அரை நூற்றாண்டுகாலமாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் போயுள்ளனர்.
விரைவில் லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக இறுதி முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆலோசனைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. நேற்றும் டெல்லியில் இந்த பிரச்சனை குறித்து ஆந்திர மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், தெலுங்கானா விவகாரத்தில் ஆலோசனைகள் முடிவடைந்துவிட்டன. முடிவுதான் அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. இக்கூட்டத்தில் தெலுங்கானா பற்றி உறுதியான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்குவதற்கு முன்பாக தெலுங்கானா நிலைப்பாட்டை அறிவிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications