கடலில் மூழ்கி 3 பேர் பலி.. வேளாங்கண்ணியில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம் மலைசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவாக வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு கடற்கரைக்குப் போய் குளியல் போட்டனர். அப்போது 20 வயதான பூபதி, 36 வயதான சரவணன், 37 வயதான தங்கராஜ் ஆகியோர் கடலில் மூழ்கி விட்டனர்.
அலையில் சிக்கித் தடுமாறிய அவர்கள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து கடற்கரைப் பாதுகாப்புப் போலீஸார் விரைந்து வந்தனர். மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications