இன்று சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 4 மணிக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
காமராஜர் பிறந்தநாள், சரத்குமார் பிறந்தநாள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், அவரது மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications