கூடங்குளம் அணு உலை பணிகள் திடீர் நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.13500 கோடி மதிப்பீட்டில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த 11ம் தேதி அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து அன்று நள்ளிரவு 11.58 மணிக்கு மின் உற்பத்திக்கான ஆயத்தபணிகள் தொடங்கியது. ஜூலை 13ம் தேதி முதல் அணு உலை இயங்க தொடங்கியது.
முதல் அணு உலையின் மூலம் 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு மாதமாகும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் அணு உலையில் அணு தொடர் பிளவுகளை இந்திய அணு சக்தி துறை, ரஷ்ய விஞ்ஞானிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் அணு உலையில் நடைபெற்று வந்த தொடர் வினைகள் நிறுத்தப்பட்டுளளது.
இது குறித்து கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் நடைபெற்று வந்த தொடர் வினைகள் சோதனை முடிவுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் புள்ளி விபரங்களாக தொகுக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான் என்றார். அடுத்த 3 நாட்களில் மீண்டும் அணு உலை இயக்கப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications