பிரேசிலில், இறகுகளால் ஆன இந்திய தலைப்பாகையை அணிந்து மகிழ்ந்த போப் பிரான்சிஸ்
Subscribe to Oneindia Tamil

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோ நகரில் நடை பெற்ற உலக இளைஞர் தின விழாவிற்கு தலைமை தாங்க வந்த போப் பிரான்சிஸ், அங்கு வாழும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கலைஞர்கள் ஆகியோர் இடையே நேற்று சொற்பொழிவு ஆற்றினார்.
பின்னர், அங்கிருந்த ஒவ்வொருவராக அழைத்து ஆசி வழங்கினார். அப்போது போப்பிடம் வாழ்த்து பெற சில இந்தியர்களும் மேடையேறினர். வெறும் உடம்புடன் பாசிமாலைகளை அணிந்து, காது மற்றும் மூக்கில் பழங்கால அணிகலன்களை அணிந்து வந்த இந்தியர் ஒருவர் தனது தலைப்பாகையை போப்பிடம் அளித்து அதை அணிந்துக்கொள்ளும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
உடனடியாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், அவரது தலைப்பாகையை வாங்கி அணிந்து கொண்ட போப், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.












Click it and Unblock the Notifications