பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நிதீஷ்குமர்: சர்ச்சையை கிளப்பிய சத்ருகன் சின்கா

Subscribe to Oneindia Tamil

Shatrughan heaps praise on Nitish Kumar, says Bihar CM is ‘PM material'
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று நடிகரும் பாஜக எம்.பியுமான சத்ருகன் சின்கா கருத்து கடும் புயலைக் கிளப்பியுள்ளது.

நடிகரும் பாரதீய ஜனதா எம்.பியுமான சத்ருகன் சின்கா இன்று பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு நல்ல மனிதர். நல்ல கொள்கை உள்ள மனிதர்.அவர் முதிரந்த அரசியல்வாதியும் நல்ல மனிதரும் ஆவார். மேலும் பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக ஆகும் வாய்ப்பு உள்ளது. நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்றும் கூறினார். அதேபோல் மோடி எனது அன்புக்கு உரிய தலைவர் புகழ்பெற்ற தேச தலைவர் என்று கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முறிவு ஏற்பட்டதற்கு ஐக்கிய ஜனதா தளம் காரணம் அல்ல, தற்போது மதச்சார்பின்மை தான் இந்தியாவிற்கு தேவை, எனவே பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் பீகார் முதல்வர் நிதீஷ் தான் என்றார்.

கடந்த வாரம் சத்ருகன் சின்கா பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் இதனைத் தொடர்ந்தே இவ்வாறு கருத்துக்கூறியுள்ளார். சத்ருகன் சின்காவின் பேச்சிற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+