இலங்கை கஇலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் சிறை பிடிப்பு- மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்: இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் சார்பில் 10ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது.

நாகை மாவட்ட மீனவர்கள் 5 விசைப்படகுகளிலும், காரைக்கால் மீனவர்கள் 4 விசைப்படகுகளிலும் என மொத்தம் 9 விசைப்படகுகளில் மீன் பிடிக்க தென்கிழக்கு பகுதி நடுகடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையினர் 9 விசைப்படகுகளையும், 65 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கூட்டி சென்றனர். இதில் 41 பேர் நாகையை சேர்ந்தவர்கள், 24 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 34 பேர் யாழ்பாணம் சிறையிலும், 31 பேர் திரிகோணமலை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரையும் விடுவிக்க கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1500 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் நாகை கடுகையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதை தொடர்ந்து வருகிற 10ம்.தேதி மீனவ பெண்கள் சார்பில் விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி கடற்கரையில் வரிசையாக மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+