For Daily Alerts
Just In
மோடி எதிர்ப்பு எதிரொலி- குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி பொறுப்பேற்க மறுப்பு!
அகமதாபாத்: குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியாக பொறுப்பேற்க ஆர்.ஏ. மேத்தா மறுப்பு தெரிவித்து ஆளுநர் கம்லா பெனிவாலுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
10 ஆண்டுகாலம் காலியாக இருக்கும் குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை ஆளுநர் கம்லா பெனிவால் நியமித்தார். ஆனால் மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமலேயே மேத்தாவை ஆளுநர் நியமித்துவிட்டார் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியாக மேத்தா பொறுப்பேற்க வேண்டும். ஆனால் முதல்வர் மோடி தமக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பதவியேற்க முடியாது என்று ஆளுநர் கம்லா பெனிவாலுக்கு மேத்தா கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதியின் பதவிக்காலம் தொடர்ந்தும் காலியாகவே இருக்கும்.
Comments
English summary
Justice (Rtd) R A Mehta, who had been appointed as Gujarat Lokayukta, refuses to take charge of the post.
Story first published: Wednesday, August 7, 2013, 12:08 [IST]