நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருந்தார்: ஒப்புக்கொண்டது பாக்.!!
இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சதிகாரனாகிய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு தூதரான ஷர்யார் கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராகிம். அவருக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸும் விடப்பட்டிருந்தது. இந்தியாவோ பாகிஸ்தானில்தான் தாவூத் பதுங்கி இருப்பதாகவும் அவரை ஒப்படைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லவே இல்லை என்று இத்தனை காலம் பாகிஸ்தானும் சாதித்தே வந்தது. அண்மையில் கூட ஐபிஎல் பிக்ஸிங் வழக்கில் தாவூத் பெயரும் குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இருந்ததை பாகிஸ்தான் இப்போது முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு தூதரான ஷர்யார் கான் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தாவூத் இப்ராகிம் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அனேகமாக அவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பார். பாகிஸ்தானில் தாதாக்கள் செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இந்த பகிரங்க ஒப்புதல் இந்தியாவுடனான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications