பயணிகளின் வசதிக்காக விரைவில், அனைத்து ரயிகளிலும் ‘வாட்டர் பியூரிபையர்’....
டெல்லி: பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளதாம் இந்திய ரயில்வே.
பொதுவாக ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குடி தண்ணீர் தேவை ஏற்பட்டால், ஒன்று கையோடு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால், சமீப காலங்களில் அவ்வாறு விலை கொடுத்து வாங்கப்படும் வாட்டர் பாட்டில்களும் சுகாதாரமானவையாக இருப்பதில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்கள் ரயில் பயணிகள்.
எனவே, பயணிகளின் ரயில் பயணத்தை இனிமையாக்கும் பொருட்டு மேன்மேலும் பல வசதிகளைச் செய்து வரும் இந்திய ரயில்வே, தற்போது ரயில்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.

வாட்டர் பியூரிபையர்...
முதல் கட்டமாக ஜலந்தர் ரயிலில் இந்த வாட்டர் ப்யூரிபையர் கருவி பொருத்தப் பட்டுள்ளதாகவும், விரைவில் அது செயல் பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர்.

சோதனை முயற்சி...
மேலும், அதன் வெற்றியைப் பொறுத்து அடுத்தகட்டமாக சோதனை முயற்சி அடிப்படையில் நெடுந்தூர ரயில் பயணங்களில் இது மாதிரி குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்படும் ஐடியா இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எப்படிங்க எங்க ஐடியா...
தற்போது ரயில் குழாய்களில் வரும் நீர், ஆங்காங்கே நிரப்பப் படும் குடிநீரே ஆகும். இதனால் ஒரே தரமான குடிநீர் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனைக் களையும் பொருட்டே இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி திட்டமாம்.

என் சமையல் அறையில்....
ஏற்கனவே, ராஜ்தாணி மற்றும் சதாப்தி ரயில்களில் உள்ள சமையல் அறைகளில் வாட்டர் பியூரிபையர்ஸ் வெற்றிக்கரமாக செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுத்தமே எங்கள் தாரக மந்திரம்...
ரயில் பயணிகளுக்கு நல்ல சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்குவதே இந்திய ரயில்வேயின் முக்கிய குறிக்கோள். அதற்காகவே, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சுத்திகரிப்பு பணியாளர்கள்...
அதேபோல், ரஜ்தானி, சதப்தி, டொரோண்டோ போன்ற ரயில்களில் அவ்வப்போது ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கு என ‘ஆன் போர்டு ஹவுஸ்கேபிங் சர்வீஸ் ( ஓ பி ஹெச் எஸ்)' என்ற பெயரில் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு....
ஏங்க, நம்மாளுங்க ட்ரெயின் டாய்லட்ல இருக்கற கப்பையே கழட்டிட்டுப் போற நல்லவங்களாச்சே... வாட்டர் பியூரி பையருக்கு மறக்காம ரெண்டு செக்யூரிட்டி ஆபிசர் போட்டுடுங்க சார்...
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications