பயணிகளின் வசதிக்காக விரைவில், அனைத்து ரயிகளிலும் ‘வாட்டர் பியூரிபையர்’....
டெல்லி: பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளதாம் இந்திய ரயில்வே.
பொதுவாக ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குடி தண்ணீர் தேவை ஏற்பட்டால், ஒன்று கையோடு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால், சமீப காலங்களில் அவ்வாறு விலை கொடுத்து வாங்கப்படும் வாட்டர் பாட்டில்களும் சுகாதாரமானவையாக இருப்பதில்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்கள் ரயில் பயணிகள்.
எனவே, பயணிகளின் ரயில் பயணத்தை இனிமையாக்கும் பொருட்டு மேன்மேலும் பல வசதிகளைச் செய்து வரும் இந்திய ரயில்வே, தற்போது ரயில்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.

வாட்டர் பியூரிபையர்...
முதல் கட்டமாக ஜலந்தர் ரயிலில் இந்த வாட்டர் ப்யூரிபையர் கருவி பொருத்தப் பட்டுள்ளதாகவும், விரைவில் அது செயல் பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர்.

சோதனை முயற்சி...
மேலும், அதன் வெற்றியைப் பொறுத்து அடுத்தகட்டமாக சோதனை முயற்சி அடிப்படையில் நெடுந்தூர ரயில் பயணங்களில் இது மாதிரி குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்படும் ஐடியா இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எப்படிங்க எங்க ஐடியா...
தற்போது ரயில் குழாய்களில் வரும் நீர், ஆங்காங்கே நிரப்பப் படும் குடிநீரே ஆகும். இதனால் ஒரே தரமான குடிநீர் பயணிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனைக் களையும் பொருட்டே இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி திட்டமாம்.

என் சமையல் அறையில்....
ஏற்கனவே, ராஜ்தாணி மற்றும் சதாப்தி ரயில்களில் உள்ள சமையல் அறைகளில் வாட்டர் பியூரிபையர்ஸ் வெற்றிக்கரமாக செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுத்தமே எங்கள் தாரக மந்திரம்...
ரயில் பயணிகளுக்கு நல்ல சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்குவதே இந்திய ரயில்வேயின் முக்கிய குறிக்கோள். அதற்காகவே, இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சுத்திகரிப்பு பணியாளர்கள்...
அதேபோல், ரஜ்தானி, சதப்தி, டொரோண்டோ போன்ற ரயில்களில் அவ்வப்போது ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கு என ‘ஆன் போர்டு ஹவுஸ்கேபிங் சர்வீஸ் ( ஓ பி ஹெச் எஸ்)' என்ற பெயரில் பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு....
ஏங்க, நம்மாளுங்க ட்ரெயின் டாய்லட்ல இருக்கற கப்பையே கழட்டிட்டுப் போற நல்லவங்களாச்சே... வாட்டர் பியூரி பையருக்கு மறக்காம ரெண்டு செக்யூரிட்டி ஆபிசர் போட்டுடுங்க சார்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications