கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி!
பூஞ்ச்/டெல்லி: போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி கார்கிலிலும் இந்திய நிலைகளின் மீது தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் உள்ள திராஸ் மற்றும் கக்ஸாரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நிலைகள் மீது வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் படைகள் சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதலே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

திராஸ் மற்றும் கார்கில் இடையே அமைந்துள்ள கக்ஸார் பகுதியில் உள்ள செனிகண்ட் நிலை மீது, பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த இடம் மிக உயரமானது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கிருந்து தாக்கினால் காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் தகர்க்க முடியும். முன்பு 1999-ல் இங்கிருந்துதான் இந்திய ராணுவ அதிகாரி சௌரவ் காலியாவும், அவருடன் இருந்த வீரர்களும் பாகிஸ்தான் படையினரால் கடத்தப்பட்டனர்.
சில நாள்கள் கழித்து அவர்களது உடல்களை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது உடலில் காணப்பட்ட கடுமையான காயங்கள் உறுதிப்படுத்தின.
கடந்த 1999-ல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதும், இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே நேருக்கு நேர் சண்டை நடந்ததும், இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.
பாகிஸ்தான் துருப்புகள் சமீபகாலமாக காஷ்மீரின் ஊரி மற்றும் கெரான் பகுதிகளிலும், ஜம்மு மண்டலத்தில் பூஞ்ச் மற்றும் ஆர்.எஸ்.புரா பகுதிகளிலும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என ராணுவ அமைச்சகம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications