டெல்லியில், பட்டத்தை அறுத்த தகராறு: சிறுவன் படுகொலை, நண்பர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சிருவர்களுக்கு இடையே பட்டம் விடும் போது ஏற்பட்ட தகராறில், பழி வாங்கும் விதமாக 17 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். அவனது நண்பரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வடகிழக்கு டெல்லியின் ஹர்சா விஹார் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவனான ராஜன் சந்த், கடந்த வெள்ளிக்கிழமை தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.

அப்போது எதிர்பாராத விதமாக அவனது பட்டத்தின் நாண் கயிறில் சிக்கி, மற்றொரு பட்டம் அறுபட்டுள்ளது. இதனால் கோபமுற்ற அச்சிறுவன் ராஜன் சந்த்தை நேரில் சந்தித்து மிரட்டியுள்ளான். அதனை அவ்வளவாக சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை ராஜன். மறுநாள் சனிக்கிழமையன்று தன் நண்பரோடு வெளியில் சென்றிருந்தான் ராஜன். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை அதிரடியாகத் தாக்கியுள்ளது.

இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கப் பட்டதில் ராஜன் பரிதாபமாகப் பலியானான். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவனது நண்பனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+