குடும்பத்தை ‘மிஸ்’ பண்ணும் சஞ்சய்...: 10 நாள் பரோலுக்கு விண்ணப்பம்
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, தற்போது எரவாடா சிறையில் இருக்கும் சஞ்சய் தத் 10 நாள் பரோலில் வெளிவர நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருக்கிறாராம்.
1993ம் ஆண்டு மும்பையில் அடுத்தடுத்து 13 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில் சிக்கி சுமார் 250 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். அதன் எதிரொலியாக சட்டவிரோதமாக ஆய்தம் வைத்திருந்ததாகவும், குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற சஞ்சய் தத் தற்போது எரவாடா சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்து வருகிறார். தற்போது, சிறைச் சூழலில் இருந்து விலகி 10நாட்கள் குடும்பத்தோடு கழிக்க ஆசை வந்துள்ளதாம் சஞ்சய்க்கு.

வீட்டுச் சாப்பாடு...
சிறைக்கு சென்ற புதிதில் சிறை வாழ்க்கைப் பழகும் வரை, சஞ்சய்க்கு ஒருமாத காலம் வீட்டு உணவு வழங்க உத்தரவிடப்பட்டது. சிரையில் அவரது அறையில் ஒருமாத காலத்திற்கு மட்டும் மின்விசிறி பயன்படுத்திக் கொள்ளாவும் அனுமதி வழங்கப்பட்டது.

கிளார்க் புரோமோஷன்...
சிறையில் சஞ்சய் தத்திற்கு முதலில் பேப்பர் பை செய்யும் தொழில் கற்றுத் தரப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 40 ரூபாய் ஊதியத்ஹ்டில் பணிபுரிந்து வரும் சஞ்சய் தத், தனது ஓய்வு நேரங்களில் சிறை ஊழியர்களுக்கு அலுவலகப் பணிகளிலும் உதவி வருகிறார்.

நான் இங்கு சுகமே....
தினமும் சிறையில் இருந்தபடி தனது மனைவி மானயாதத்க்கு கடிதம் எழுதி வருகிறார் சஞ்சய். மானயாவும் பதில் எழுதத் தவறுவதில்லையாம். சமீபத்தில் தனது 53வது பிறாந்த தினத்தைக் கூட சிறையில் தான் கழித்தார் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது.

பரோல் ஆசை...
இந்நிலையில் வீட்டிற்குச் சென்று மனைவி, மக்களுடன் 10 நாட்கள் இருந்து வர ஆசைப் படுகிறாராம் சஞ்சய். இதற்காக பரோலுக்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications