தொடரும் ரூபாய் மதிப்பு சரிவு.. மத்திய அரசு மீது மோடி புகார்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புகார் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, மத்திய அரசு பொருளாதார சரிவையோ, இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்தோ கவலைப்படாமல் பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பது குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனை சரி செய்ய மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார் மோடி.












Click it and Unblock the Notifications