For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நட்பு நாடு இல்லை என்றால் அப்புறம்...: ஞானதேசிகன்

Google Oneindia Tamil News

Gnanadesikan has a question for TN politicians
சென்னை: இலங்கை நட்பு நாடு இல்லை என்றால் ஈழத் தமிழர்களின் நலனுக்காக 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து யாரிடம் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 4,000 கோடி ரூபாய் செலவில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து வர, அங்கு நிருபர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இது குறித்து, காங்கிரஸ் மேலிடத்தில் எடுத்துக் கூறியுள்ளேன்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது; இலங்கை நட்பு நாடு கிடையாது என தமிழக அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, 13வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் குறித்து யாரிடம் பேச வேண்டும் என அந்தத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

English summary
TNCC president Gnanadesikan said some of the TN politicians are stressing that Sri Lanka is not our neighbouring nation. If that is the case, will they tell us with whom shoud we discuss about the 13th amendment, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X