ஸ்ரீபெரும்புதூரில் வாகனத்தோடு ரூ.4 கோடி தங்கம் ‌கொள்ளை: பெங்களூரில் பெண் உட்பட 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீபெரும்பத்தூர் அருகே ரூ. 4 கோடி தங்கம் நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் பெண் உட்பட 6 பேரை பெங்களூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓசூரில் இயங்கும் டாடா நிறுவனத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமையன்று சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் வேனுடன் கடத்தி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளைக் கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வேனில் இருந்த டிரைவர் ராஜேஷ், முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, சுப்பர்வைசர் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் வேன் டிரைவர் ராஜேஷ் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் அவரது மகன் கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனை பிடிக்க தனிப்படை போலீஸார் ஒசூருக்கு விரைந்தனர்.

இதையடுத்து பெங்களூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த டிரைவரின் மகன் உள்பட அவரது கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளார். வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கொலை வழக்கில் டிரைவர் ராஜேஷின் மகன் வேலூர் ஜெயிலில் இருந்தபோது அங்கிருந்த கைதிகளுடன் திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிப்பட்டவர்களின் பெயர் விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. அவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள்Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+