For Daily Alerts
Just In
பழனி முருகன் கோயிலில் மொட்டை முடியை 'ஆட்டைய' போட்ட பலே ஊழியர்கள்!!
பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் காணிக்கை செலுத்திய மொட்டை முடியை திருடி விற்றதாக 6 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி திருக்கோவில் அலுவலகம் அருகே உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அம்முடி ஏலம் விடப்படும். ஒவ்வொருநாளும் முடி இருப்பும் பதிவு செய்யப்படும்.
முடி இருப்பு குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான முடி மாயமாகிப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொட்டை முடியை 'ஆட்டைய' போட்டுவிட்டார்களாம் ஊழியர்கள்.
இதனால் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் திருக்கோவில் ஊழியர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்பிரமணி, லெட்சுமணன், ஆனந்தன் ஆகிய 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Comments
English summary
6 Palani temple employees were suspended for hair missing from the collection romm.
Story first published: Tuesday, August 20, 2013, 15:25 [IST]