8 அமைச்சர்கள், 21 மாவட்டச் செயலர்கள் மாற்றம் எப்போது? திகிலில் அதிமுக
சென்னை: கொட நாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா திரும்பி ஒருவாரமாகிவிட்ட நிலையில் எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றமும் மாவட்ட செயலர்களுக்கான கல்தாவும் நிகழலாம் என்ற திகிலில் இருக்கின்றனர் அதிமுகவினர்.
முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவர் உட்பட சிலர் மாற்றப்படுவது உறுதி என்று கடந்த சிலவாரங்களாக பேசப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினமும் முடிவடைந்துவிட்ட நிலையில் எந்த நிலையிலும் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதலில் 4 அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. தற்போது 8 அமைச்சர்கள் வரை மாற்றப் போகிறார்கள் என்ற தகவல் பரவ பீதியில் இருக்கிறார்களாம் அமைச்சர்கள்.
அத்துடன் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுகவின் 21 மாவட்ட செயலர்களை மாற்றவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம். இதனால் ஒவ்வொரு மாவட்ட செயலரும் கல்தா பயத்தில் கலங்கிப் போயுள்ளனராம்.
அனேகமாக சனி அல்லது ஞாயிறு இந்த மாற்றங்கள் அரங்கேறலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications