பாகிஸ்தான் பயங்கரவாத நாடு என்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும்: ராம. கோபாலன்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது நாட்டின் எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் நமது நாட்டிற்குள் நுழைவதற்கே என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. இருந்தும் நமது மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
இது நாட்டு மக்களை கவலைகொள்ள செய்துள்ளது. துண்டாவின் சாட்சியை கொண்டு உலக அரங்கில் பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும். நமது எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க வேண்டும்.
தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அரசு துணிச்சலோடு செயல்பட்டு பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பாவிகள் என்று முஸ்லிம் அமைப்புகள் திசைதிருப்புவது கண்டிக்கத்தக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications