தர்மபுரியில் 144 தடை உத்தரவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தர்மபுரியில் 144 தடை உத்தரவை தொடர்ந்து நீட்டிப்பது ஏன்? குறித்து தமிழக அரசு வரும் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த திவ்யாவை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மரணம் அடைந்ததையடுத்து, தர்மபுரியில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அந்த தடை உத்தரவு இதுவரை ரத்து செய்யப்படவில்லை.தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தர்மபுரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால், இறந்து போன இளவரசன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற முடியவில்லை. எனவே, தர்மபுரியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தர்மபுரியில் இன்னும் ஏன் 144 தடை உத்தரவை தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, வரும் 26ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications