கூட்டணியை அறிவிக்க மாநாட்டை கூட்டுகிறார் விஜயகாந்த்! தமிழக அரசியலில் பரபரப்பு!!

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தேமுதிக, காங்கிரஸ் இடையேயான உறவும் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் காங்கிரஸ்- திமுக உறவும் வலுத்து வருகிறது. இதனால் தேமுதிக- காங்கிரஸ்- திமுக கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமது பிறந்த நாளின் போதே செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், எப்படி சட்டசபை தேர்தலுக்காக சேலம் மாநாடு நடத்தப்பட்டதோ அது போல் லோக்சபா தேர்தலில் தொண்டர்களின் கருத்தைக் கேட்க மாநாடு நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இப்போது தேமுதிகவின் அஜெண்டாவாக இருப்பது அந்த மாநாடுதானாம். இந்த மாநாட்டை மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஏதேனும் ஒரு நகரில் நடத்தலாமா என்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கூட்டணிக்கான பேர பேச்சுகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறதாம். அனேகமாக செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழக அரசியலை கலகலக்கப் போகும் தேமுதிக மாநாடு நடைபெறலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications