மும்பை கற்பழிப்பு குற்றவாளிகள் ஏற்கனவே 2 பெண்களை கற்பழித்துள்ளனர்: போலீசார்
மும்பை: மும்பை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே இரண்டு பெண்களை கற்பழித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்த 5 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளனர். விசாரணையில் அவர்கள், அதே மில் வளாகத்தில் குப்பை பொறுக்கும் பெண் மற்றும் விபச்சாரம் செய்யும் பெண் என இரண்டு பேரை கற்பழித்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த மில் பகுதிக்கு தனது ஆண் நண்பருடன் வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை.
அந்த 5 பேரும் திட்டமிட்டு தான் கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் குஜராத் மற்றும் டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் நேற்று மும்பைக்கு வந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications