மத்திய அரசு ராஜினாமா செய்தால்தான் ரூபாயைக் காப்பாற்ற முடியும்- யஷ்வந்த் சின்ஹா
டெல்லி: ரூபாய் மதிப்பு மேலும் சரிவதையும், வர்த்தகத்தில் ஸ்திர நிலையைக் கொண்டு வருவதையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ராஜினாமா செய்வதன் மூலம்தான் செய்ய முடியும் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்வதைத் தடுக்க வேண்டுமானால், வர்த்தகத்தில் ஸ்திர நிலையைக் கொண்டுவர வேண்டும் என்றால், உடனடியாக இந்த மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டும். அப்போதுதான் ரூபாயைக் காப்பாற்ற முடியும், பங்கு வர்த்தகத்தில் ஸ்திர நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
இன்னொரு பாஜக தலைவரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவிதமான யோசனையும் இல்லை. புதிய ஐடியாக்கள் இல்லை. பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு இவர்களது திறமையின்மைதான் காரணம்.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், கோவா ஆகியவற்றில் 10 சதவீதத்திற்கு் மேலான பொருளாதார வளர்ச்சி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications