செல்போன் பறிமுதல் வழக்கு… ரத்து செய்யக்கோரி நளினி மனு
வேலூர்: வேலூர் சிறைச்சாலையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, நளினியின் அறையில் இருந்து கடந்த ஏப்ரலில் செல்போன் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தனது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஒரே குற்றச்சாட்டில் இரண்டாவது முறை வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதே குற்றச்சாட்டிற்கு சிறை அதிகாரி தமக்கு ஏற்கனவே தண்டனை வழங்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் நளினி தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications