திருச்செந்தூர், விளாத்திகுளம்- கடல் தாது மணல் குடோன்களில் ஆய்வு
திருச்செந்தூர்: திருச்செந்தூர், விளாத்திக்குளம் பகுதிகளிலுள்ள தனியார் கடல்தாது மணல் குடோன்களில் கனிமவளத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து வைத்து 3வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழுவினர் கடந்த 12, 13, 14ம் தேதிகளில் முதல்கட்ட ஆய்வு நடத்தினர். தொடர்ந்து 19, 20ம் தேதிகளில் 2ம் கட்ட ஆய்வினை தொடர்ந்து முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கடல்தாது மணல் நிறுவனங்களுக்கு சொந்தமான குடோன்களில் தமிழக கனிமவளத்துறை இயக்குநர் பழனிவேல் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் மணல் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் குழுவினர் 2வது நாளாக திருச்செந்தூர், விளாத்திக்குளம் பகுதிகளிலுள்ள தனியார் கடல்தாது மணல் குடோன்களில் கனிமவளத்துறை இயக்குநர் பழனிவேல் தலைமையில் இன்று 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, பெரியதாழையில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கடல்தாது மணல் ஏற்றிய லாரியை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியதாழை ஊர்கமிட்டி தலைவர் கன்பூசியஸ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் லாரியை விடுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வந்து உறுதி அளித்தால் மட்டுமே லாரியை விடுவிப்போம் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரியை சிறைபிடித்து மீனவமக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சம்பவம் திருச்செந்தூர், மணப்பாடு, பெரியதாழை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications