செப்டம்பர் 3 முதல் 5ம் தேதி வரை துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி
துபாய்: துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு துவக்க விழா நடைபெற இருக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய இணை அமைச்சர் முனியப்பா சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியை அமீரகத்துக்கான இந்திய தூதரகம் மற்றும் சில்வர் ஸ்டார் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கண்காட்சிக்கு துபாய் அரசின் சுற்றுலாத்துறை, ஆல் இந்தியா அசோசியேஷன் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ், ஆல் இந்தியா ரைஸ் எக்ஸ்போர்டர் அசோசியேஷன், தேங்காய் ஏற்றுமதி வாரியம், துபாய் இந்தியன் பிஸினெஸ் அன்ட் ப்ரொஃபஷனல் கவுன்சில், கேரளா சேம்பர் ஆஃப் காமர்ஸ், காதி கிராம தொழில் கமிஷன், ஜெட் ஏர்லைன்ஸ், லமா டூர்ஸ் உள்ளிட்டவை ஆதரவு நல்கியுள்ளன.
இந்த கண்காட்சி குறித்து மேலும் விபரம் அறிய மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.silverstaroman.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.