வங்கிகளுக்குப் புதிய தலைவலி.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆடிப்போக வைக்கும் புள்ளி விவரம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் வங்கிகள் கடன் வழங்கும் நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டு காலத்தில், வங்கிகளின் கடன் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 17.65 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.இந்தியாவில் வங்கி கடன் ரூ.215.15 லட்சம் கோடியை எட்டி உள்ளது.

கடன் வாங்கியாவது காரியம் நடத்து" என்பது தற்காலப் பொருளாதாரத் தாரக மந்திரமாகிவிட்டது. இதற்குச் சான்றாக, இந்தியாவில் வங்கிகள் கடன் வழங்கும் நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள், இந்தியர்களின் கடன் வாங்கும் வேகம் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

Bank Credit Soars to 215 15L Cr Deposit Lag Triggers Intense Rate War Among Banks

அசுர வேகத்தில் வங்கித் துறை: எகிறும் புள்ளிவிவரங்கள்

கடந்த மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டு காலத்தில், வங்கிகளின் கடன் வளர்ச்சி ஆண்டு அடிப்படையில் 17.65% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.182.87 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் மொத்த கடன், தற்போது ரூ.215.15 லட்சம் கோடியாக எகிறியுள்ளது.

கடன் அதிகரிக்க என்ன காரணம்?

வங்கிக் கடன்கள் இந்த அளவுக்குத் திடீரென அதிகரிக்க முக்கியக் காரணங்கள்:

பத்திரச் சந்தை வீழ்ச்சி

பத்திரச் சந்தையில் வட்டி விகிதம் உயர்ந்ததால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கு நிதி திரட்டுவதைத் தவிர்த்தன. அதற்குப் பதிலாக, மலிவான நிதி ஆதாரத்திற்காக மீண்டும் வங்கிகளை நோக்கி ஓடி வரத் தொடங்கின.

சில்லறைக் கடன் பிரிவில், நடுத்தர மக்கள் தங்களின் உடனடித் தேவைகளுக்காகத் தங்கக் கடன்களை வாரிச் சுருட்டுவது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

முதலிடத்தில் எந்தக் கடன்?

ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, தற்போது சேவைத் துறைக்கான கடன்கள்தான் 19% உயர்ந்து முதலிடத்தில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, பெரிய நிறுவனங்களின் வரவால் தொழில்துறை கடன் (Industrial Loan) வளர்ச்சி 15 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

வங்கிகளுக்கு வந்துள்ள புதிய தலைவலி

ஒருபுறம் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 17.65% உயர்ந்துள்ள நிலையில், வங்கிகளில் பொதுமக்கள் பணம் போடும் வைப்புத்தொகை வளர்ச்சி வெறும் 12.21% ஆக மட்டுமே மந்தமாக உள்ளது. (கடந்த ஆண்டு ரூ.231.73 லட்சம் கோடியாக இருந்த வைப்புத்தொகை, தற்போது ரூ.260.02 லட்சம் கோடியாகவே உயர்ந்துள்ளது). கடன் வளர்ச்சிக்கும், வைப்புத்தொகை வளர்ச்சிக்கும் இடையே 5.44% இடைவெளி உள்ளது. அதாவது, வங்கிகளில் இருந்து வெளியேறும் பணத்தின் அளவுக்கு உள்ளே டெபாசிட் வரவில்லை.

இந்த நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், புதிய டெபாசிட்டுகளை ஈர்க்கவும் வங்கிகளுக்கு இடையே இப்போது கடுமையான வட்டிப் போட்டி நிலவி வருகிறது. நிலைமையைச் சமாளிக்க வங்கிகள் 'டெபாசிட் சான்றிதழ்கள்' ) மூலம் மொத்தமாக நிதி திரட்டும் அவசர வழிகளையும் கையாண்டு வருகின்றன. ந்தியப் பொருளாதாரம் கடனை நம்பி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது; ஆனால், சேமிப்புத் பழக்கம் பின் தங்கியுள்ளது என்பதுதான் தற்போதைய எதார்த்தம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+