For Daily Alerts
Just In
கச்சத்தீவை திரும்பப் பெற மன்மோகன், குர்ஷிதிடம் வலியுறுத்துவேன்: மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்
இது குறித்து அவர் டெல்லி கிளம்பும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 1974ம் ஆண்டு இந்தியா கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழல் வேறு. அப்போது இலங்கை நம்முடன் நட்புறவு பாராட்டியது. ஆனால் தற்போது அப்படி இல்லை.
தமிழர்களுக்கு எதிரான செயல்களில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க கச்சத்தீவு அருகே சென்றாலே அவர்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவை திரும்பப் பெறுவது அவசியமாகும். இது குறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்துவேன் என்றார்.
Comments
English summary
Central minister GK Vasan told that he will insist the PM to get back Kachativu.
Story first published: Tuesday, September 3, 2013, 8:44 [IST]