For Daily Alerts
Just In
கேரளாவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி... 25 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புழா பகுதியில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலர் பள்ளி மாணவர்கள் என்று அஞ்சப்படுகின்றனர்.
மலப்புரம் மாவட்டம் அலனலூரில் இருந்து பெரிந்தல்மன்னா என்ற ஊருக்கு மினிபஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
தெல்லக்காட் என்ற கிராமத்தின் அருகே வந்த போது சாலையோராத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 13 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இதில் பெரும்பாலோனோர் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.
இதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேரில் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பெரிந்தல்மன்னா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
In yet another gruesome bus mishap in Malappuram, 13 people are reported to be killed and 25 injured when the bus overturned at Thelakkat, near Perinthalmanna here on Friday.