சொத்துக் குவிப்பு வழக்கு: பெங்களூர் கோர்ட்டில் ஜெ. மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணையின் முடிவில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா நியமித்துக் கொள்ள அனுமதித்தது.
இந்த நிலையில் தம் மீதான வழக்கு விசாரணையை உடனடியாக தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா, ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 13ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications